அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடைபெற்றது. இன்று காலை 11.25 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி வரை வேட்புமனு திரும்பப்பெறலாம்.
வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. 8-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.