

முடி அடர்த்தியாக வளர
தேவையான பொருள்கள்
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயில் – 4 சொட்டுகள்
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி அதற்கு மேல் சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயை சேர்த்து டபுள் பாயிலிங் முறையில் சூடு செய்ய வேண்டும்.
எண்ணெய் சூடாகிக் கொண்டிருக்கும்போதே நான்கு சொட்டுகள் ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயிலையும் சேருங்கள்.
இந்த எண்ணெய் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து நன்கு மசாஜ் செய்து விட வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்தோ அல்லது இரவு முழுக்க வைத்திருந்தோ தலைககு மென்மையான ஷாம்பு கொண்டு குளிக்கலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர தலைமுடி வேகமாக வளர ஆரம்பிக்கும்.
