இந்திய வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்படலாம் என பொருளாதார வல்லூநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் வட்டிவிகிதங்கள் உயர்வு மற்றும் பொருளாதார தாக்கங்களால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுவது குறைந்துவிட்டதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஜூலை 1ம் தேதி நிலவரப்படி வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சி 9.8% ஆக இருக்கிறது. ஆனால் கடன் வளர்ச்சி 14.4% ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் வங்கிகள் திவால் ஆகும் நிலை கூட ஏற்படலாம். எனவே இதற்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது.