• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • அவதூறு பரப்பி வரும் பிரதீப் ராஜன், மற்றும் வீரமணி, ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு..,

அவதூறு பரப்பி வரும் பிரதீப் ராஜன், மற்றும் வீரமணி, ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு..,

கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதான அன்னக்கிளி. இவர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தனது குடும்பத்தினருடன் இந்த பகுதியில் தான் வசித்து வருவதாகவும், வேடப்பட்டி பேரூராட்சியில்,…

உரம் கடத்தல் விவகாரத்தில் அதிமுக  நிர்வாகி மீது புகார்..,

கோவையில் உரம் கடத்தல் விவகாரத்தில் அவதூறு பரப்புவதாக அதிமுக நிர்வாகி மீது கோவை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.கோவை மாவட்டம் திருமலையாம்பாளையத்தில் குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 டன்  யூரியா உர மூட்டைகள் சமீபத்தில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த  விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்புவதாக திருமலையாம்பாளையம் திமுக  பேரூராட்சி தலைவர் கவிதா உதயகுமார் நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு  அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் யூரியா உரத்தை ஒரு தனியார் நிறுவனம்  சட்டத்திற்கு புறம்பாக கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்து கோவை  திருமலையாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி உள்ளது. பின்னர் இயந்திரத்தின் மூலம் திரவமாக மாற்றி கேரளாவிற்கு அனுப்பியது தெரியவந்தது.விவசாயிகள் போராட்டத்தால் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து குடோனை சீல் வைத்தனர். நிறுவனத்தை நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதற்கிடையே திருமலையாம்பாளையத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சிலம்பரசன்  என்பவர், இந்த குடோன் திருமலையாம்பாளையம் பேரூராட்சியின் அனுமதியோடு  நடந்தது. பேரூராட்சி தலைவர் கவிதா உதயகுமார் மற்றும் 8வது வார்டு உறுப்பினர்  ஆனந்தகுமாருக்கு தெரியாமல் இந்த நிறுவன நடத்த வாய்ப்பில்லை என எங்கள் மீது  வீண் பழியை சுமத்தி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புகிறார். எனவே இந்த  விவகாரத்தில் எங்கள் மீது அவதூறு பரப்பும் அதிமுக நிர்வாகி சிலம்பரசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தடுப்புச் சுவரில் கார் பயங்கர மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே அதிவேகமாக வந்த கார், ராமகிருஷ்ணா வித்யாலயா மேம்பாலத் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதிய விபத்தில், கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல்…

தற்கொலை அல்ல இது கொலை..!

கரூரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 24), என்ஜினீயர். இவருக்கும் கோவையை சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இந்த நிலையில் தடாகம் அருகே உள்ள மடத்தூரை சேர்ந்த புகைப்பட கலைஞர் பிரவீனுக்கும்…

அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா..,

கோவை மருதமலை அருகில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக உச்சநீதிமன்ற நீதியரசர் மோகனா…

ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் மையத்தைத் திறந்து வைத்த அமைச்சர் கீர்த்தனா..,

ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் குளோபல் கேபபிலிட்டி சென்டரான ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் இந்தியா, இன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஒரு புதிய ஆபீஸைத் திறந்து வைத்துள்ளது. கோவையில் எஸ்விபி டெக் பார்க்கில் அமைந்துள்ள இந்த மையம், சென்னையில் உள்ள குளோபல் டெக்னாலஜி அண்ட்…

ஜூலை 9 முதல் 12 வரை “பிளாட் 50% மெகா விற்பனை”..,

கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது எண்ட் ஆஃப் சீசன் எனும் மெகா விற்பனையை ஜூலை 9 ந்தேதி துவங்கி 12 ந்தேதி நடத்த உள்ளது… இந்நிலையில் இது குறித்த குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு லுலு மாலில் நடைபெற்றது.. செய்தியாளர்கள் சந்திப்பில்…

விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி..,

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை பிரிவு சார்பில் 8வது உழவே தலை என்ற விவசாயிகளுக்கான கருத்தரங்கம் வருகிற 10-ஆம் தேதி கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது. அக்ரி இன்டெக் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த கருத்தரங்கில் 4 வகையான தலைப்பின்…

சுற்றுசூழலை பாதிக்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை..,

தற்போதைய சூழலில் சுற்றுசூழலை பாதிக்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சார்பில் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை…

டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,

வடிவமைப்புக் கல்வியில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் , 2026-ஆம் ஆண்டு புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், கல்வி நிறுவனத்தின் நிர்வாகம், பேராசிரியர்கள்,…