தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் முன்பாக மது போதையில் கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த நபர் டாட்டா ஏசி மற்றும் இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இது குறித்து தகவல் அறிந்த போடி காவல்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது மது போதையில் இருந்த நபர் காவல்துறையினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மது போதையில் இருந்த நபர் மீது காவல்துறையினர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் திரும்பி சென்றனர்.
தற்பொழுது மது போதையில் வாகனங்கள் மீது மோதிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.