நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தங்கள் மீதான நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளனர்.
முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் அர்ச்சனாவும் அவரது மகளும் இணைந்து ’தாயில்லாமல் நானில்லை’ என்ற அம்மா தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ ஒன்று அந்த தொலைக்காட்சி சேனலின் சமூக வலைதள பக்கங்களில் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த புரோமோவுக்கு கீழே பலரும் அர்ச்சனாவையும் அவரது மகள் சாராவையும் ட்ரோல் செய்து நிறைய நெகட்டிவ்வான கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தற்போது சாராவும், அர்ச்சனாவும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளனர்.
அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, “எங்களை வெறுப்பவர்களுக்கான பதிலாக இதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். சமீபத்தில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நானும் என் அம்மாவும் இணைந்து தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் புரோமோ வெளியானது. ஏன் என்று காரணம் தெரியாமலேயே அதற்கு நிறைய வெறுப்புகள் வெளிப்படுத்தும் வகையிலான கமெண்ட்டுகள் நிறைய பேர் பதிவு செய்திருந்தீர்கள். இதில் முக்கியமானது நிறைய பெண்களே எங்களை அநாகரிகமான மொழியில் பேசியிருந்தீர்கள்.
அதிலும் குறிப்பாக இரண்டு அழகான குழந்தைகளுக்கு அம்மாவே எங்கள் மீது அப்படி ஒரு கமெண்ட்டை கொடுத்திருந்ததும் எனக்கும் நியாபகம் இருக்கிறது. எங்களுக்கு அன்பு மட்டுமே முக்கியம். எங்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள். எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்குமே நன்றி.
அன்புடன், சாரா” என அந்த கடிதத்தில் அர்ச்சனா மகள் தெரிவித்து இருக்கிறார்.
சாராவின் இந்த கமெண்ட்டுக்கு நிறைய பேர் பாசிட்டிவான கமெண்ட்டுகளை தற்போது பதிவிட்டு வருகின்றனர்.
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]