• Fri. Apr 26th, 2024

காவல்துறை துணை கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ByIlaMurugesan

Nov 2, 2021

திண்டுக்கல்லில், தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.

திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். இவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் நடைபெற்ற பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்து தெரியவருகிறது.

அதிமுக ஜெயராமன் மகன், அவரது நண்பர்கள், அதிமுக மாணவரணி நகர செயலாளர் அருளானந்தம் உள்ளிட்டோர் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகின்ற நிலையில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது அந்த வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி ஜெயராமன் வீட்டில் சோதனை செய்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *