நடிகர் சிவகுமார் கடந்த 20 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நிலையில் தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பயனுறும்வகையில் தனது வாழ்க்கைப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நேரங்களில் ‘கம்பராமாயணம்’, ‘மகாபாரதம்’ போன்ற இதிகாசங்களை மக்களுக்கு எளிய வகையில் புரிவதைப் போல தொடர்ச்சியாக 4 மணி நேரத்தில் எடுத்துரைத்தார். இந்த சொற்பொழிவுகளும், விளக்கவுரையும் வீடியோ வடிவிலும், எழுத்து வடிவிலும் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ‘திருக்குறள் 100’ என்ற தலைப்பில் 4 மணி நேரம் உரை நிகழ்த்தியதோடு அல்லாமல், அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
100 திருக்குறள்களை எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கையை வாழ்ந்த தான் அறிந்த சிறந்த மனிதர்களின் அனுபவங்களை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்’ என்கிற பார்வையில் நடிகர் சிவக்குமார் பேசிய அந்த உரை, ஈரோட்டை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகத்தையும் பேச வைத்துள்ளது.இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் மணக்குடவர், பரிமேலழகர் முதல் கலைஞர், சாலமன் பாப்பையாவரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகுமார், வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை பேசியுள்ளார்.
‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு’ என்ற குறளில் தொடங்கி 100-வது கதையாக மலக் குழிகளில் இறங்கி உயிர்விடும் அப்பாவி துப்புரவுத் தொழிலாளியின் கதைவரையிலும் கூறி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அதற்குரிய குறளைக் கூறி நிறைவு செய்துள்ளார்.பெரும் வரவேற்பை பெற்ற இந்த ‘திருக்குறள் 100’ சிறப்பு நிகழ்ச்சியாக ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளில் தொடங்கி காணும் பொங்கல்வரை தொடர்ந்து 3 நாட்கள் (15.1.23,16.1.23, 17.1.23) ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.இதனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசியவற்றில் 50 குறள்களின் பேச்சுக்கள் பத்திரிகை நிருபர்களுக்காக ஒளிபரப்பு செய்யப்பட்டது. எந்தவிதக் குறிப்பும் இல்லாமல், தங்கு தடையின்றி மிக எளிய தமிழில், பாமரனுக்கும் புரியும்படியான மொழியில் கதைகளுக்கேற்ற உச்சரிப்புடன் நடிகர் சிவகுமார் பேசியவிதம் அனைவரையும் கவர்ந்திழுத்தது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது, “கடந்த 40 ஆண்டுகளாக திரைப்படங்களில், நாடகங்களில், சின்னதிரையிலும் நான் பணியாற்றினேன். என் 64-வது வயதில் இனி மேக்கப் போட்டு நடிப்பதில்லை என்று முடிவெடுத்தேன். பின்னர் தமிழ் இலக்கியத்தின் பக்கம் என் கவனம் திசை திரும்பியது.அப்படி என்னை திசை திருப்பியவர் எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன். அவர் கடந்த 18 ஆண்டுகளாக ஈரோடு புத்தக விழாவை எந்தவிதமான நுழைவுக் கட்டணமும் இல்லாமல் நடத்தி வருகிறார். அவர்தான் என்னை மேடைப் பேச்சுக்கு அழைத்து வந்தவர்.

‘கம்பராமாயண’த்தின் மொத்தக் கதையையும் 100 பாடல்கள் வழியாக விளக்கிப் பேசிய முதல் மனிதர் நான்தான் என்று இப்போது கூறுகிறார்கள். அதில் எனக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சிதான். அதேபோல் ‘மகாபாரத’த்தை 2 மணி10 நிமிடங்களில் விளக்கிப் பேசினேன்.. இவையெல்லாம் இப்போது யூ டியூப் தளத்தில் கிடைக்கிறது.இப்போது திருக்குறளைப் பேசியிருக்கிறேன். இதில் இறங்க வேண்டாம் என்று பலரும் முதலில் பயமுறுத்தினார்கள். ஆனால் விடாமுயற்சியோடு கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள் ஆராய்ச்சி செய்து இந்த திருக்குறள் கதைகளைப் பேசியுள்ளேன்.
இப்போது இதை ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வரும் பொங்கல் திருநாளில் ஒளிபரப்புகிறார்கள். அனைவரும் இதைப் பார்த்து திருக்குறளையும், திருக்குறள் வழி வாழ்ந்த நமது முன்னோர்களையும், சக மனிதர்களும் புரிந்து கொண்டு அதேபோல் தங்களது வாழ்விலும் நெறி பிறழாமல் வாழ்ந்து பயன் பெற வேண்டும்…” என்றார்.
“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று” – என்கிற வள்ளுவரின்குறளுக்கு எடுத்துக்காட்டாய் திகழும் நடிகர் சிவகுமார், திரையுலகில் மட்டுமன்றி தமிழ்ச் சமூகத்துக்கே ஒரு முன்னுதாரணமாய் திகழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை..!
- அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் […]
- 30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்புகாடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் […]
- நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை […]
- சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – […] - ராஜபாளையம் அருகே, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து […]
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் […] - அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்துமதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை […]
- துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிமதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி […]
- மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணைநீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
- மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணைமதுரை […]
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]
- நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…பந்தலூர் சுற்று […]
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]