ZERO ACCIDENT KUMARI என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS விதிமுறைகளை மீறும் கனிமவள வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.

- உத்தரவின் படி கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில்,
- நேர கட்டுப்பாட்டை மீறியும், முறையான போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வந்த கனிமவள வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




