சென்னை திருவொற்றியூர் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் வணிக வளாகங்களுடன் கூடிய மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
திருவொற்றியூர் நகராட்சி வளாக மையத்தில் ஒரு வணிக வளாகம் மற்றும் கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இதே போன்ற ஒரு வணிக வளாகத்துடன் கூடிய மல்டி லெவல் பார்க்கிங் வசதிக்கான மேம்பாட்டுப் பணிகள் 25 ஆண்டுகளுக்கு வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, செயல்பாடு மற்றும் பரிமாற்றம் அடிப்படையில் செயல்படுத்தப்படும். மேம்பாட்டுப் பணிகளுக்காக, சென்னை மாநகராட்சி தலா ரூ.5 லட்சம் ஒதுக்கியுள்ளது. மேலும் ஏப்ரல் 23 அன்று டெண்டர் விடப்படும் என்றும் அன்றைய தினமே ரிப்பன் மாளிகையில் டெண்டர் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்ச் 13 அன்று பிற்பகல் 3 மணிக்கு அதிகாரிகள் தலைமையில் நடைபெறும் ஏலத்திற்கு முந்தைய கூட்டத்திற்குப் பின் அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்க திட்டம்
