• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மாதா திருத்தலத்தில் பாக்கும், படியும் நிகழ்ச்சி..,

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் டிசம்பர் மாத 10 நாள் திருவிழாவை சிறப்பிக்கும் வகையிலான பாக்கும், படியும் நிகழ்ச்சி இன்று
(நவம்பர்_02) நடைபெற்றது.

இதில் பங்குத்தந்தை உபால்டு மரியதாசன், பங்குப் பேரவை துணைத்தலைவர் டாலன் டிவேட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன், துணை செயலாளர் டெமி, இணை பங்குத் தந்தையர் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

ஏராளமான அலங்கார மாதவின் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று
அவர்களது வரி நீங்கலாக திருவிழாவிற்கு நன்கொடையாக பணம் கொடுத்தார்கள்.

அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயம் திருவிழாவிற்கு. நன்கொடை வரிசையில் கிறிஸ்தவர்கள் அல்லாத சகோதர மதத்தவர்களும்
நன்கொடை வழங்குவது கடந்த ஆண்டுகள் போல் இன்றும் தொடர்ந்தது.