குவாரியை மூட போராடியவர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.குவாரி உரிமையாளர்,லாரி ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு.
கரூரில் சட்ட விரோதமாக இயங்கிய கல்வாரியை மூட வலியுறுத்தி போராடி வந்த ஜெகன்நாதன் என்பவர் லாரி ஏற்றிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.இருசக்கர வாகனத்தில் அவர் சென்ற போது கல்குவாரிக்கு சொந்தமான லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். விபத்து போல ஜோடிக்க நினைத்த விவகாரத்தில் கல்குவாரி முதலாளி , லாரி ,ஓட்டுனர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.