• Tue. Jul 2nd, 2024

பண்ணைக்காடு அருகே நடுரோட்டில் எரிந்தது கார், அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்

Byதரணி

Jun 30, 2024

சிதம்பரம் காட்டுமன்னர்கோவிலை சேர்ந்த ஆரிப்புல்லாவிற்கு சொந்தமான காரில் 6 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு ஊத்து பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது காரில் புகை வந்தது. தொடர்ந்து தீப்பற்றி எரிந்தது காரில் இருந்த இளைஞர்கள் 6 பேரும் உடனடியாக வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடைக்கானல் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *