• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் உலா வந்த கருஞ்சிறுத்தை

ByG. Anbalagan

Feb 10, 2025

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் மாலை நேரத்தில் தேயிலை தோட்டங்கள் வழியாக கருஞ்சிறுத்தை நடந்து சென்றதை கண்டு மக்கள் அச்சமடைந்தனர்

கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சிறுத்தை கருஞ்சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது

இரவு நேரங்களில் மட்டுமே அதிகமாக சிறுத்தைகள் நடமாடி வரும் நிலையில் நேற்று மாலை பெத்தளா என்ற கிராமத்தில் மாலை கருஞ்சிறுத்தை உலா வந்தது

இதனைக் கண்ட கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர் தேயிலை தோட்டங்கள் வழியாக மெதுவாக நடந்துச்சென்ற கருஞ்சிறுத்தை வன பகுதிக்குள் சென்றது

கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் தேயிலை தோட்டபணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சுமடைந்துள்ளனர்