கோவை சரவணம்பட்டியில் அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் கிளினிக்கின் 150-வது கிளை திறக்கப்பட்டது
இந்தியாவின் முன்னணி முடி மீளுருவாக்கம் மற்றும் சருமப் பராமரிப்பு சிகிச்சை நிறுவனங்களில் ஒன்றான அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், கோவை சரவணம்பட்டியில் தனது புதிய கிளையை திறந்துள்ளது.

இக்கிளையில் Percutaneous FUE Hair Transplant, Stem X 27 Pro™ (PRP Pro+), LASER Hair Therapy, Regen Pro9™ உள்ளிட்ட அமெரிக்க US-FDA அங்கீகாரம் பெற்ற நவீன முடி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், பல்வேறு மேம்பட்ட சரும பராமரிப்பு சிகிச்சைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.
மேலும், Glutathione IV Therapy, HydraFacial, Q-Switched Laser, Botox, Dermal Fillers, Thread Lift, Full Body Laser Hair Reduction உள்ளிட்ட நவீன சரும சிகிச்சைகளும் அனுபவமிக்க மருத்துவ நிபுணர்களால் அதிநவீன உபகரணங்களின் உதவியுடன் வழங்கப்படுகின்றன.

சிகிச்சைகளுக்கு துணையாக, நிறுவனத்தின் பிரத்யேகமான OnePro முடி மற்றும் சருமப் பராமரிப்பு தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கிளை திறப்பு விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கிளையை திறந்து வைத்தார். மேலும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி சந்தோஷ், தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் மாவட்ட செயலாளர்
ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. சரண்வேல் ஜெயராமன் கவுரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.




