சாத்தூர் சரக காவல் துணை கண்காணிப்பாள ராக பணியாற்றி வந்த நாகராஜ் சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக பணி மாறுதல் செய்யப்பட்டார்.

சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் காவல் உதவி ஆணையராக பணிபுரிந்த குருசாமி சாத்தூர் சரக காவல் துணை கண்காணிப்பாளராக மாறுதல் செய்யப்பட்டார். இவர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு உயர் அதிகாரிகள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.










