• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அறிஞர் அண்ணா மாரத்தான் நெடுந்தூர ஓட்டப்போட்டி..,

ByS. SRIDHAR

Oct 30, 2025

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் நெடுந்தூர ஓட்டப்பட்டிகள் துவக்கி வைப்பதற்காக சிறப்பு விருந்தினராக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து இப்போட்டியில் ஆண்கள் 17 to 25 வயது உட்பட்டவர்கள் திருமயம் சாலை ஜே ஜே கல்லூரி சிவபுரம் வரை சென்று எட்டு கிலோமீட்டர் தூரம் கணக்கிடப்பட்டது.

25க்கு மேல் இருப்பவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும் 17 டு 25 வயது வருபவர்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் என்று கணக்கிடப்பட்டு போட்டிகள் துவக்கி வைத்தனர் இப்போட்டியில் வெற்றி பெறும் முதலிடம் பெறுபவர்களுக்கு முதல் பரிசு ஐந்தாயிரம் இரண்டாம் பரிசு 3000 மூன்றாம் பரிசு 2000 நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் வரை மாணவ மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றன. போட்டியில் நடை பயிற்சி செய்யும் 30 வயசுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என பொதுமக்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.