• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பப்ஜியில் தோல்வி அடைந்ததால் சிறுவனை வெட்டிய கொடூரம்..,

ByPrabhu Sekar

Jul 31, 2025

சென்னை பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை தேவநேசன் பகுதியை சேர்ந்தவர் மணி தாமஸ் இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பெருங்களத்தூர் கிளை தலைவராக பதவி வகித்து வருகிறார்.

மேலும் அதே பகுதியில் தனியாக ஒரு அலுவலகத்தை வைத்துக்கொண்டு கிளீனிங் பணிக்கு ஆட்களை அனுப்பும் தொழிலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் அலுவலகத்தில் மணி தாமஸ் பணி புரிந்து கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்ற சிறுவன் இவரது கடைக்கு வந்துள்ளார்.

அப்பொழுது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் சிறுவனை வெட்டி உள்ளனர்.

உடனே அந்த சிறுவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மணி தாமஸ் கடைக்குள்ளே சென்றுள்ளார்.

அங்கு இருந்த மணி தாமஸ் சிறுவனை வெட்டிய நபர்களை தடுத்து நிறுத்திய போது கோபம் அடைந்த 5 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அவனை நி காப்பாற்றுவா என கூறி மணி தாமஸின் கை கால் தலையில் வெட்டி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த மணி தாமஸை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .

மேலும் தன்னை வெட்டிய நபர்களின் மீது பீரக்கண்காரணை காவல் நிலையத்தில் மணி தாமஸ் புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் சென்னை பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை தேவநேசன் பகுதியை சேர்ந்தவர் மணி தாமஸ். இவர் இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பெருங்களத்தூர் கிளை தலைவராக பதவி வகித்து வருகிறார்.

மேலும் அதே பகுதியில் தனியாக ஒரு அலுவலகத்தை வைத்துக்கொண்டு கிளீனிங் பணிக்கு ஆட்களை அனுப்பவும் தொழிலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் அலுவலகத்தில் மணி தாமஸ் பணி புரிந்து கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்ற சிறுவன் இவருக்கு கடைக்கு வந்துள்ளார்.

அப்பொழுது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் சிறுவனை வெட்டி உள்ளனர்.

உடனே அந்த சிறுவன் தன்னைக் காப்பாற்றும் மணி தாமஸ் கடைக்குள்ளே சென்றுள்ளார். அங்கு இருந்த மணி தாமஸ் சிறுவனை வெட்டிய நபர்களை தடுத்து நிறுத்திய போது கோபம் அடைந்த 5 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அவனை நி காப்பாற்றுவா என கூறி மணி தாமஸின் கை கால் தலையில் வெட்டி உள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மணி தாமஸை அக்க பக்கத்தில் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .

மேலும் தன்னை வெட்டிய நபர்களின் மீது பீரக்கண்காரணை காவல் நிலையத்தில் மணி தாமஸ் புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் பட்டா கத்தியால் வெட்டிய அஜித், அசோக், சந்தோஷ், ஹரி, மாசாணம் சுடலை. ஆகிய ஐந்து இளைஞர்களை கைது செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய பட்டாகத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் விஷ்வா மற்றும் அதே பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் செல்போனில் பப்ஜி விளையாட்டு விளையாடும் போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதனை பெரியவர்கள் ஒன்று கூடி சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து இளைஞர்கள் விளையாட்டில் தோல்வியடைந்துள்ளனர்.அதே நேரத்தில் இவர்களைப் பற்றி இது தரப்பில் உள்ள சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் கேவலமாக பதிவு செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் இதற்கு காரணம் ஆன சிறுவன் விஸ்வாவை வெட்டியதும் அதே நேரத்தில் தடுக்க வந்த மணி தாமஸை வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.