• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காவல்துறையால் கௌரவிக்கப்பட்ட மாணவி..,

ByM.S.karthik

Jul 12, 2025

ஆரோக்கியம், ஒழுக்கம் மற்றும் இளம் தலைமுறையின் திறமையை முன்னிறுத்தும் வகையில், ஜெய் ஆருத்‌ரா 8 வயதுடைய யோகா நிபுணர் மற்றும்
கல்வி குழுமபள்ளி மாணவி, மதுரை மாநகர காவல்துறையினருக்காக ஏ.ஆர். மைதானத்தில் 600 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளித்தார்.

6 வயதில் உலகின் மிக இளைய யோகா பயிற்சியாளராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஜெய், இந்த நிகழ்வில் தனது அமைதியான அணுகுமுறையும் துல்லியமான வழிகாட்டல்களாலும் அதிகாரிகளை ஈர்த்தார். ஆசனங்கள் மற்றும் சுவாச பயிற்சிகள் மூலம் தங்களை புத்துணர்வாக்கும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது.

மதுரை மாநகர காவல் ஆணையர் டாக்டர் லோகநாதன் ஜெய் ஆருத்‌ராவுக்கு விசேஷ பாராட்டும் நினைவுச்சின்னம் மற்றும் கின்னஸ் சாதனை ஷீல்டை வழங்கி கௌரவித்தார்.

இளமையிலேயே இப்படிப்பட்ட ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தெளிவான இலக்குகள் உள்ளவர்கள் தான். ஜெய் ஆருத்‌ரா இன்றைய இளைய தலைமுறைக்கு அருமையான முன்னுதாரணம் என்று தெரிவித்தார்.

ஜெய், 200 மணி நேர RYT சான்றளிக்கப்பட்ட யோகா பயிற்சியாளர், யோகா, ஆரோக்கியம் மற்றும் ஒழுங்குமுறை வாழ்க்கையை ஊக்குவிக்கப் பன்னாட்டளவில் அங்கீகாரம் பெற்றவர். அவரது தாயார் (சர்வதேச யோகா பயிற்சியாளர் மற்றும் பல் மருத்துவர்) மற்றும் கின்னஸ் சாதனை பெற்ற மாஸ்டர் பிரகாஷ் ஆகியோரின் வழிகாட்டுதலுடன், டிஜிட்டல் சாதனங்களின்றி, தினமும் காலை 5 மணிக்கு எழுந்து பயிற்சி மேற்கொள்வதை தன்னுடைய வாழ்க்கை முறை ஆக மாற்றியுள்ளார்.

யோகாவைத் தவிர, துப்பாக்கிச் சுடுதல் நீச்சல், மற்றும் மலைப் பயணங்கள் என பலதுறைகளிலும் அவர் சாதனை படைத்துள்ளார். சமீபத்திய கிளப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கங்களை*வென்றுள்ளார். மேலும், 10 மலைப்பயணங்களை நிறைவு செய்துள்ள அவர், உச்சியில் யோகா செய்து தனது இயற்கை பாசத்தையும் ஒருங்கிணைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஏ.ஆர். துணை ஆணையர் கல்வி குழும பள்ளி தலைமை ஆசிரியர், தலைவர் மற்றும் மாணவியினர், ஆசிரியர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஜெய் ஆருத்‌ராவை பாராட்டினர்.

கல்வி குழும பள்ளி நிர்வாகம், இத்தகைய இளம் தலைமுறை ஊக்குவிப்பு முயற்சிக்கு உறுதுணையாக இருந்த மதுரை மாநகர காவல்துறைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தது.