• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

ByKalamegam Viswanathan

Apr 13, 2025

“நம் வாழ்விற்கு அடிப்படையாக இருக்கும் மண், காற்று மற்றும் நீருக்கு நன்றியை வெளிப்படுத்தும் காலமாக தமிழ் புத்தாண்டு நாள் அமையட்டும்” என ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஈஷா நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“புத்தாண்டு என்பது பூமியின் அனைத்து உயிர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்த கூடிய சூரிய ஒளியின் தீவிரம் வடக்கு அரைக்கோளத்தில் அதிகரிக்கும் ஒரு காலகட்டத்தைக் குறிக்கிறது.

அதிகப்படியான பசுமையும் நிழலும் இருந்தால் கோடையின் வெப்பம் அவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்காது. இது மனிதர்களுக்கும் மற்ற எல்லா உயிர்களுக்கும் நிம்மதியைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது மண்ணை வளமாக வைத்திருக்கும்.

புதுப்பித்தல் மற்றும் மீளுருவாக்கத்தின் இடைவிடாத சுழற்சிகளில் இருக்கும் மண், காற்று மற்றும் நீர் ஆகிய அடிப்படை கூறுகளுக்கு நன்றி செலுத்தி கொண்டாட வேண்டிய நேரம் இது. அவை அவ்வப்போது வாழ்க்கை புதிதாக மலர்வதை உறுதி செய்கின்றன. இந்த புத்தாண்டில், நீங்கள் மலர்வதற்கு இந்த இயற்கையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

அனைவருக்கும் “தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.