• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

எம் பி பழனி தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Mar 29, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் திமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் எம் பி பழனி தலைமையில் 100 நாள் வேலைத்திட்டத்தின் வேலை செய்த பொதுமக்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து உசிலை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் பிரதிநிதிகள் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் 100 நாள் வேலை சம்பளத்தை மத்திய அரசு அடிக்காதே என்றும் பொதுமக்களுக்கு சம்பளம் வழங்காமல் வயிற்றில் அடிக்காத என்று பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.