• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முதல் முறையாக சாம்பியன் பட்டம்

Byகாயத்ரி

Nov 30, 2021

பஹ்ரைனில் நடந்த மனோமா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் ரஷ்ய வீரர் எவ்கெனி கார்லோவிஸ்கியுடன் நேற்று மோதிய ராம்குமார் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

2வது செட்டில் கார்லோவ்ஸ்கி கடும் நெருக்கடி கொடுத்தாலும் அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ராம்குமார் 6-1 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார்.இப்போட்டி 1 மணி 1 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஏடிபி சேலஞ்சர் தொடர்களில் 7 முறை பைனலுக்கு முன்னேறி உள்ள ராம்குமார் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.