• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மாசி பௌர்ணமியை விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அபிஷேகம்.

ByAnandakumar

Mar 13, 2025

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மாசி பௌர்ணமியை முன்னிட்டு விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாசி மாத பௌர்ணமி முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் விஸ்வகர்மா சுவாமிக்கு இன்று இரவு பௌர்ணமியை அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு விஸ்வகர்மாவுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் விஸ்வகர்மா சுவாமிக்கு நடைபெற்ற மாசி மாத பௌர்ணமி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் வசந்த் சர்மா சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.