• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

ByAnandakumar

Mar 5, 2025

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது மக்களை காக்க வேண்டிய காவல்துறையினர் ஏடிஜிபி தனக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லக்கூடிய நிலை உள்ளது என்றால் அதை எண்ணி பார்க்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் அரவக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில், முன்னாள் அமைச்சர், அமைப்புச் செயலாளர் சின்னச்சாமி, முன்னாள் அமைச்சர், கழக மகளிர் அணி இணைச் செயலாளர் வி. சரோஜா அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது மக்களை காக்க வேண்டிய காவல்துறையினர் ஏடிஜிபி தனக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லக்கூடிய நிலை உள்ளது என்றால் அதை எண்ணி பார்க்க வேண்டும்

பொய்யைச் சொல்லிய இந்த விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னால் இன்னும் ஓராண்டுகள் மட்டுமே உள்ளது 12 அமாவாசையில் மட்டுமே உள்ளது.

இதில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் என்பது தமிழகத்திற்கான விடுதலைக்கான தேர்தல் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.செங்கோட்டையின் வரவில்லை உள் கட்சியில் என்ன பிரச்சனை சொல்கிறீர்கள்?

அண்ணா திமுக என்பது ஒரு குடும்பம் 4 பேர் இருந்தாலே சின்ன பிரச்சினைகள் வரும் ஆனால் எடப்பாடி ஆட்சி காலத்தில் இரண்டு கோடி பேர் உறுப்பினர்கள் என்ற மாபெரும் இயக்கம் எங்களுக்குள் இருக்கும் பிரச்சினையை உங்களை யார் கேட்டது,

தமிழகத்தில் தனிப்பெரும் இயக்கம் என்று சொன்னால் அது அனைத்தையும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என்றார்.