மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகள் சார்பாக கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா கவுண்டன்பட்டி சாலையில் உள்ள ஏ.ஜி ஆலயத்தில் நடைபெற்றது. இதில் ஆர். சி, சி.எஸ். ஐ, டி இ எல் சி, ஏ. ஜி உள்ளிட்ட
பத்துக்கு மேற்பட்ட சபைகள் கலந்து கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தி கிறிஸ்துமஸ் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடினர்.


இயேசு கிறிஸ்து பிறப்பின் கிறிஸ்மஸ் கீத ஆராதனை விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
