திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும் மழை வளம் பெறவும் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 1008 பெண்கள்திருவிழாக்கு பூஜையில் கலந்து கொண்டனர். திருவாச்சி மண்டபத்தில் துவங்கி சன்னதி முழுவதும் பெண்களால் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.