திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5ம் தேதிவரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலில் ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தரிகளின்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் எனவும், ஆவணித் திருவிழா நிகழ்வுகளை வீட்டிலிருந்தே யூ-டியூப் வாயிலாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.