கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுபட்டு வரும் ஆதரவாளர்களுக்கு உணவு பொட்டலங்கள், டீ , பிஸ்கட் விநியோகிக்கப்படுகின்றது. மேலும் காலை 6 மணியில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு குவிந்து வருகின்றனர். இதனால் சுகுணாபுரம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு சூழல் நிலவுகிறது.
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் அதிமுக சார்பாக உணவு பொட்டலங்கள், தேனீர் குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக தொண்டர்கள் அதிகளவில் கூடி வருவதால் இங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், பொள்ளாச்சி ஜெயராமன், ஏகே சின்ராஜ், கந்தசுவாமி, தாமோதரன் உள்ளிட்டோர் காலையிலிருந்து முதல் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டின் முன்பு காத்திருக்கின்றனர்.