• Sat. Dec 6th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சரக்கு ரயிலின் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை..,

ByS.Ariyanayagam

Dec 6, 2025

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே சரக்கு ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல், எரியோடு மரவபட்டியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் வினோத்(34) இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை, மனைவி 1 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் வினோத் மன உளைச்சல் காரணமாக எரியோடு அருகே திண்டுக்கல் நோக்கி வந்த சரக்கு ரயில் முன்பு விழுந்து உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.