• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா?

BySeenu

Aug 13, 2025

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? , டிடிவி தினகரன் மூலமாக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, அப்படி அவர் வந்தால் எனக்கு சந்தோசம் என பதில் அளித்தார்.மேலும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனரும் பங்கேற்பார்களா என்ற கேளவிக்கு,
தினகரனிடம் நான் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்.

தினகரன் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்.நீங்கள் நினைப்பதை போல வெகுவிரைவில் எல்லோரும் ஒரே மேடையில் ஏறுவோம் என தெரிவித்தார்.டிடிவி பெயரையும், அவரது கட்சி பெயரையும் எடப்பாடி பழனிச்சாமி சொல்லாமல் தவிர்ப்பது குறித்த கேள்விக்கு , முறையாக சில ஏற்பாடுகள் முடிந்த பின்னர் எல்லாருடைய பெயரையும் சொல்வார் என கூறிய நயினார் நாகேந்தின்,திமுக தோல்வி பயத்தில் இருக்கின்றனர் என்றும் திமுக கூட்டணி வலுவாக இருப்பதைப் போல மாயை உருவாக்கி இருக்கின்றனர் என்றும் கூறினார்.

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு ,கொலை கொள்ளை கஞ்சா கடத்தல், போதை பொருள் நடமாட்டம் என அதிகரித்துள்ளதாகவும் வழக்கமாக ஆளுங்கட்சிக்கு 10 சதவீதம் எதிர்ப்பு இருக்கும். ஆனால் இந்த ஆட்சியின் மீது 100 சதவீதம் எதிர்ப்பு மக்களிடம் இருக்கிறது என்றும் விமர்சித்தார்.வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற அவரிடம் சுயமரியாதை முக்கியம் என ஓபிஎஸ் கூறியிருப்பதாகவும் ஓபிஎஸ் அவர்களின் சுயமரியாதை பாதிக்கக் கூடிய அளவிற்கு என்ன செய்தீர்கள் என செய்தியாளர் கேள்வி எழுப்பவே எல்லோருக்கும் சுயமரியாதை முக்கியம். உங்களுக்கும் முக்கியம். எனக்கும் முக்கியம் என்றும் வெகு விரைவில் நீங்கள் நினைப்பது போல நடக்கும் எனவும் பதிலளித்து சென்றார் நயினார் நாகேந்திரன்.