• Tue. Jun 18th, 2024

மேலக்கால் ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் பணிகள்

ByN.Ravi

Jun 12, 2024

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட 8 மற்றும் 9வது வார்டு பகுதிகளில் சுமார் 8 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது . பொதுமக்களின் பல நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சுமார் 8 லட்சம் மதிப்பில் 2022.23 ஆம் நிதிஆண்டில் 15 வது நிதி குழுவின் பரிந்துரையின்படி, இந்த பணிகள் நடைபெற்று வருவதாக ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளால் , பகுதி பொதுமக்கள் ஊராட்சி மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *