கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் இறை தேடி உலா வந்த சிறுத்தையின் வீடியோ வைரல் வெளியாகின.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி உலா வருவதாலும், வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே கேசலாடா குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. இந்த காட்சி அந்தப் பகுதி குடியிருப்பு வாசிகளை அச்சமடைய செய்துள்ளது.