தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட்பிரபு. சென்னை 600028 என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெங்கட்பிரபு நகைச்சுவையின் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் அவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான வெங்கட்பிரபு தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். மறைந்த கே.பாலசந்தர் இயக்கத்தில், எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில், கமல்ஹாசன், ஆலம், ஹேமா சவுத்ரி, ஜெயப்பிரதா, ஒய் விஜயா மற்றும் பலர் நடிக்க 1976ம் ஆண்டில் வெளிவந்த படம் மன்மத லீலை பெண்கள் மீது மோகம் கொண்ட நாயகனாக கமல்ஹாசன் நடித்த படம். படத்தின் கதைக்கும் தலைப்பிற்கும் மிகவும் பொருத்தமான படம். அந்தப் படத்தின் தலைப்பில் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, சம்யுக்தா ஹெக்டே, ஸ்முருதி வெங்கட், ரியா சுமன் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர்.
வெங்கட்பிரபுவின் 10வது படமாக உருவாக உள்ள இப்படத்தை தெலுங்கிலும் அதே பெயரில் தயாரிக்க உள்ளார்களாம். சென்னை 600028 முதல் மாநாடு படம் என வெங்கட்பிரபு இதுவரை இயக்கிய 9 படங்களுக்குமே யுவன்சங்கர்ராஜாதான் இசையமைத்துள்ளார். ஆனால், இந்த படத்திற்கு முதன்முறையாக யுவன்சங்கர்ராஜா இசையமைக்கவில்லை. அவருக்கு பதிலாக வெங்கட்பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பிரேம்ஜி நடிகர் மட்டுமின்றி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருப்பவர் வெங்கட்பிரபுவின் குயிக்கி அதாவது வெங்கட்பிரபுவின் விரைவுப் படம் என அவரே குறிப்பிட்டுள்ளார்.மன்மதலீலை படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
படத்தின் அறிவிப்புக்கு அசோக்செல்வனும் நன்றி தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபுவின் ரசிகனாக இருந்து அவருடன் பணியாற்றுவதற்கு நன்றி. படத்தின் போஸ்டரில் அசோக் செல்வன் ஒருபுறம் முத்தங்கள் கொண்ட முகத்துடனும், இன்னொரு முகத்தில் கோபத்துடன் காயத்துடன் தாடியுடன் இருப்பது போன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைப்பதற்கும், வெங்கட்பிரபுவின் விரைவுப்படம் என குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் என்ன காரணம் என விசாரித்தபோது மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா என்கிற சூழல் நிலவி வந்தபோது முதல்பிரதிஅடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம்தான் மன்மத லீலை படம் முடிந்து எட்டு மாதங்களாகிறது பேசிய அடிப்படையில் முதல் பிரதிக்கான பாக்கிப்பணத்தை கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் அறிவிப்பும் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- குறள் 414கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை. பொருள் (மு.வ): நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய […]
- திண்டுக்கல்லில் பெண்களுக்கு விடப்படும் இலவச பேருந்துகளில்..,
கட்டணம் வசூலிப்பதாக புகார்..!திண்டுக்கல் ரயில்வே நிலையத்திற்கு அதிகாலை நேரத்தில், தமிழக அரசு பெண்களுக்கு விடப்படும் இலவச பேருந்துகளில் கட்டணம் […] - சிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு ரூ. 9 லட்சம் செலவில் சாலை வசதிசிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாலை வசதி அமைத்து கொடுக்கப்பட்டது.விருதுநகர் […]
- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரை இழுக்க கிராம மக்களுக்கு அழைப்பு..!மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி […]
- பீகார் மாணவிகள் நாகர்கோவிலில் கல்வி பயில்வது தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு -தமிழிசைபீகாரில் இருந்து மாணவிகள் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர் இதை பார்க்கின்ற போது தேசிய […]
- ஏப்ரல் 1ம் தேதி ஆளுநர் ஆர்என்.ரவி ராஜபாளையம், சிவகாசிக்கு வருகைவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் உள்ள கல்லூரிகளின் விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து […]
- முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைஆபத்தான இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.தென் தமிழ்நாட்டில் […]
- மதுரையில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த கூட்டம்மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் […]
- நீலகிரி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
- மஞ்சூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக […]
- ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் […]
- உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளதுஉக்ரைன் மற்றும் […]
- ராமதாஸின் நிலைப்பாட்டை தவிர்க்க கோரிக்கைதமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் அதனை மையிட்டு அழிப்போம் என […]
- நெருக்கமாக நடிக்க என்ன காரணம் அம்மா நடிகையின் வாக்குமூலம்“தெலுங்கு நடிகை சனா. சுமார் 200 படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். நடிகை சனாவின் முழுப் […]
- மேற்கத்திய நாடுகளில் இசை கச்சேரி நடத்தும் யுவன்சங்கர்ராஜாசமீபத்திய ‘லவ் டுடே’ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் […]