ஸ்ரீசரவணா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் B.சதிஷ் குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.படத்தில் அஜ்மல், நடிகர் அஜ்மலுடன், நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த், ‘மத்திய சென்னை’, ‘காட்டு பய சார் இந்த காளி’ படங்களின் மூலம் பலரின் பாராட்டை பெற்ற நடிகர் ஜெய்வந்த், உமா பத்மநாபன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் சத்யராஜ் படத்திற்கு திருப்பு முனை தரும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்களான P.G.மோகன் & L.R.சுந்தரபாண்டி இருவரும் இணைந்துஇயக்கியிருக்கிறார்கள்.எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை இப்போதே ஒருவர் சொன்னால் அவரை ‘தீர்க்கதரிசி’ என்பார்கள். அதுபோல நகரில் பல இடங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே காவல்துறைக்குச் சொல்லி அவர்களை உஷார்படுத்தும் ஒரு ‘தீர்க்கதரிசி’யின் கதைதான் இது.
சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நாள் அனாமதேய போன் கால் வருகிறது. அடையாரில் உள்ள ஒரு வீட்டில் தனித்திருக்கும் ஒரு வயதான பெண் ஒருவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் கொலை செய்யப்பட இருப்பதாக அந்த போனில் பேசியவர் சொல்கிறார். விளையாட்டாக யாரோ பேசுகிறார்கள் என்றெண்ணி கட்டுப்பாட்டு அறையில் அனைவரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.
ஆனால் அடையாரில் ஒரு வீட்டில் தனிமையில் இருந்த வயதான பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து போகிறார். இந்த வழக்கினை இன்ஸ்பெக்டர்களான ஜெய்வந்தும், துஷ்யந்தும் விசாரிக்கிறார்கள்.
மறுநாளும் தொடர்ந்து “இன்று இரவு அண்ணா சாலையில் ஒரு விபத்து ஏற்படப் போவதாக” அதே நபர் போனில் அழைத்து எச்சரிக்கிறார். இந்த முறை அதீத கவனத்துடன் இருந்தும் கடைசி நிமிடத்தில் ஒரு காரும், லாரியும் மோதிவிட காரில் வந்தவர் இறந்து போகிறார்.போனில் முன்கூட்டியே சொல்லியும் இப்படி நடக்கிறது. தடுக்காமல் இருக்கிறார்களே என்பதால் இந்த வழக்கினை விசாரிக்க திறமையான அதிகாரியான துணை கமிஷனரான ‘ஆதித்யா’ என்ற அஜ்மலை அழைத்து அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்.அடுத்த தகவலாக “அண்ணா நகரில் இருக்கும் ஒரு வங்கியில் கோடிக்கணக்கான பணம் கொள்ளை போகப் போவதாக” தகவல் தருகிறார் தீர்க்கதரிசி. அஜ்மல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போட்டு வைக்க, அந்த வங்கியில் இருந்து கணிணி மூலமாக 72 கோடி ரூபாய் கையாடல் செய்யப்படுகிறது. ஆனாலும் அஜ்மல் தனது போலீஸ் டீமில் உள்ள தொழில் நுட்ப வல்லுநர்களை வைத்து அந்தப் பணத்தை மீட்டு விடுகிறார்.
இந்த நேரத்தில் இந்த விஷயங்கள் பத்திரிகை, டிவி வாயிலாக மக்கள் மத்தியில் பரவ, தகவல் சொல்லும் அந்த மர்ம நபரை ‘தீர்க்கதரிசி’ என்று மக்கள் பேச ஆரம்பிக்கிறார்கள்.அடுத்து “சென்னையில் ஆயிரம் வீடுகள் இருக்கும் ஒரு அபார்ட்மெண்ட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்படப் போவதாக” தகவல் தருகிறார் தீர்க்கதரிசி. அவர் சொன்னது போலவே ஒரு அபார்ட்மெண்ட்டில் கேஸ் சிலிண்டர் வெடிக்க ஒரு பெண்மணி இறந்து போகிறார்.
மொத்தத் தமிழகமும் இதைப் பற்றியே பேசத் துவங்க எதையாவது செய்து அந்த ‘தீர்க்கதரிசி’யை பிடிக்க நினைக்கிறது காவல் துறை. இறுதியில் அந்த ‘தீர்க்கதரிசி’ யார்..? அவரை காவல் துறை கண்டு பிடித்ததா..? அந்த மர்ம நபர் ஏன் இப்படி செய்தார்..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதி கதை. துணை கமிஷனராக நடித்திருக்கும் அஜ்மலின் உடல் தோற்றத்திற்குப் பொருத்தமான கதாப்பாத்திரம்தான். ஆனால் உடல் வலிமையைக் காட்டாமல் மூளைத் திறனைக் காட்டியே நடிக்க வேண்டியிருந்ததால், தன்னால் முடிந்த அளவுக்கு தனது கேரக்டருக்கு சிறப்பு செய்திருக்கிறார் அஜ்மல்.
இரண்டாவது நாயகர்களாக நடித்திருக்கும் ஜெய்வந்தும், துஷ்யந்தும் படத்தின் பரபரப்பை தாங்களே உருவாக்கி, நடத்தி, ஓட வைத்திருக்கிறார்கள். கட்டுப்பாட்டு அறையில் அதிகாரியான ஸ்ரீமன், காக்கி உடை அதிகாரிகளால் கண்டறிய முடியாத விஷயத்தை கடைசியில் தான் கண்டறிந்து சொல்வது கதையின் டர்னிங் பாயிண்ட்டாக அமைந்திருக்கிறது. ஸ்ரீமனும் படத்தில் தனது கேரக்டரை நிறைவாக செய்திருக்கிறார்.ஸ்ரீமனின் மனைவியாக வரும் தேவதர்ஷினியும், அப்பாவாக வரும் மோகன்ராமும் வெகு இயல்பாக நடித்து, அடுத்து இவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற சந்தேகத்தை நமக்குள் விதைக்கிறார்கள்.
மேலும் மனநல மருத்துவராக ஒய்.ஜி.மகேந்திரன் அப்படியே அந்தக் கதாப்பாத்திரத்திற்குப் பொருத்தமானவராக நடித்திருக்கிறார். கட்டுப்பாட்டு அறை அலுவலர்களாக மூணாறு ரமேஷூம், மதுமிதாவும் நமக்கு பிடித்ததுபோல நடித்திருக்கிறா்கள்.
கடைசி காட்சியில் வந்து படத்தை முடித்து வைக்கும் சத்யராஜ் தனது டிரேட் மார்க் அசால்ட்டு நடிப்பினால் கவர்கிறார். இவர் சொல்லும் கதையும், அதன் அடிநாதமும் தமிழகமே அறிந்த கதைதான் என்றாலும் இதை வைத்தே மொத்தப் படத்தையும் இணைத்திருப்பது சுவாரஸ்யமான திருப்பம்தான்.புதுமுக இசையமைப்பாளரான ஜி.பாலசுப்பிரமணியனின் பின்னணி இசை படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. அந்தோணி தாசன் பாடும் பாடல் காட்சி நமக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுக்கிறது.படத் தொகுப்பாளரின் பிசிறில்லாத தொகுப்பு சஸ்பென்ஸ், திரில்லரை கடைசிவரையிலும் கொண்டு போய் படத்திற்கு மெருகேற்றியுள்ளது.
புதுவகையிலான திரைக்கதையில், கடைசி காட்சியில் உடைபடும் சஸ்பென்ஸை தாங்கிக் கொள்ளும் கதையை அமைத்து சிறப்பான நடிகர், நடிகைகளை வைத்து சிறந்த முறையில் இயக்கம் செய்து 2 மணி நேரம் சிறப்பான வகையில் நமக்கு பொழுதைப் போக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் இரட்டை அறிமுக இயக்குநர்களான பி.ஜி.மோகனும் எல்.ஆர்.சுந்தரபாண்டியும்.
படம் எந்த இடத்திலும் தேங்காமல் திரைக்கதையின் வேகத்தில் மிக வேகமாகச் சென்றிருக்கிறது. செல்போன் தொழில் நுட்பத்தை வைத்துதான் கண்டறியப் போகிறார்கள் என்று நினைத்தால், கடைசியில் அது சாதாரணமான ஒரு சின்ன சந்தேகப் புள்ளியினால் உடைக்கப்படுவது செம டிவிஸ்டுதான்.தற்போதைய தமிழக முதல்வரை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் காட்சி சுவையானது. எதிர்பாராதது. குறையாகப் பார்க்கப் போனால் ஸ்ரீமன் கண்டறிந்து சொல்லும் அந்த உண்மைகளை அஜ்மல் டீம் ஏன் யோசிக்கவில்லை என்பதுதான். படம் முடிந்த பின்புதான் படத்தில் நாயகி என்ற ஒன்றே இல்லை என்பது நமக்கு நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு நம்மை மெஸ்மரிசம் செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.
தயாரிப்பு – B.சதிஷ் குமார் (ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்),
இயக்கம் – P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி,
இசை – பாலசுப்ரமணியம்.G, ஒளிப்பதிவு – ஜெ.லட்சுமண் குமார், கலை இயக்கம் – ப.ராஜூ,
படத் தொகுப்பு – C.K. ரஞ்சித் குமார், பாடல்கள் – விவேகா, விவேக், சண்டை இயக்கம் – டான் அசோக், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் – R.R. தீபன் ராஜ்,
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]