பாரதியார் பிறந்த மண்; கட்டபொம்மபனைத் தூக்கிலிட்ட இடம் என்று தூத்துக்குடி மாவட்டத்தை யாராலும் மறக்க முடியாது இதெல்லாம் சரித்திரங்களே! ஆனால் இந்த சரித்திரங்களை கெடுக்கும் விதமாக எங்க பேரூராட்சி தலைவரின் கணவர் செயல்படுகின்றாராங்க என்ற அவலக்குரல் கயத்தாரிலிருந்து புகராக நமது அரசியல் டுடே டாட் காமிற்கு வர உடனே அங்கே ஆஐரானோம்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகள் கொண்டவை. இதற்கு பேரூராட்சி தலைவியாக சுப்புலட்சுமி (திமுக) இருந்து வருகிறார். இந்த பேரூராட்சியில் நிர்வாகம் சீர்குலைந்து இருப்பதாகவும், திறனற்ற வகையில் நடப்பதாகவும், பேரூராட்சியில் நடக்கும் ஒவ்வொரு வேளையிலும் லஞ்சப்பணம் புரழுவதாகவும் சக திமுக கவுன்சிலர்களே இதைக் கண்டு முகம் சுழிப்பதோடு மட்டுமில்லாமல் கயத்தாறே கெட்டுப்போச்சு என குற்றச்சாட்டு ஊர் முழுவதும் பேசப்பட்டு வந்தது.

சுப்புலட்சுமி
ஏன் இப்படி சொல்றீங்க இதற்கெல்லாம் காரணம் யார்? என்ற கேள்வியை முன் வைத்து உடன்பிறப்புக்கள் சிலரிடம் இது பற்றி பேசினோம்..,
நாங்க என்னத்தங்க சொல்ல என்ற ஆரம்பித்த உடன்பிறப்புக்கள் எங்க கவுர்மெண்ட் வந்துச்சு. தலைநிமிர்ந்து ஊருக்குள்ள நடக்கலாம் பாத்தா எங்க பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி கணவர் ராஜா போடற ஆட்டம் இருக்கே அப்பப்பபா.., தாங்க முடியல, மனைவி பேரூராட்சி தலைவி, அப்பா ஒன்றியச் செயலாளர் இருக்கறாதலே இந்த கயத்தாறுல ராஜா போடற தான் சட்டம். பேரூராட்சியிலே பிறப்பிடச் சான்றிதழிலிருந்து, இறப்புச் சான்றிதழ் வாங்குற வரைக்கும் கமின் தந்தாதான் இதுமட்டுமா? குடிதண்ணீர் பைப் போடுவதற்கும், வீட்டு பிளான் அப்ருவலுக்கும் அதிகாரிகள கைக்குள்ள போட்டு கமின் பாக்குறதல கில்லாடி ராஜாவா வலம் வந்துகிட்டு இருக்குறாரு. ராஜா அரசு உயர்நிலைப்பள்ளியில தற்காலிகமாக உடற்கல்வி ஆசிரியாராக பணியில் இருக்கிறாரு. அந்தப்பணிக்கு இவரே இன்னொரு ஆள தற்காலிகமா பணியில அமர்த்திவிட்டு பேரூராட்சிக்குள்ள வந்து ஆட்டம்னா ஆட்டம் போடுறாரு.
பேரூராட்சி தலைவியே தன் கணவரே செயல்பட விடமாட்டிங்கிறாரு கயத்தாறு மட்டுமில்ல திமுக தலைமைக்கும் புகார் அனுப்பிட்டோம். நீங்க என்ன புகாரு வேணாலும் அனுப்புங்க எங்க அப்பா ஒன்றியச் செயலாளரை மீறி உங்க புகார் எடுபடாது. இப்ப சம்பாதிக்கலானா நாங்க எப்ப சம்பாதிக்கிறது என்று எகத்தாலுமர் பேசுறாரு ராஜா. நிர்வாக சீர்குலைவ வெளியே நாங்க பேசறதால கட்சியில நடக்குற நிகழ்சிச்சிகளைக் கூட எங்ககிட்ட சொல்றது இல்ல. அப்படியே சொன்னாலும் கூட எங்ககிட்ட மதிப்பும் கொடுக்கறது இல்ல. இப்படியெல்லாம் உங்க மகன் ராஜா செய்யறானு கிழக்கு ஒன்றியச் செயலாளர் சின்னப்பாண்டிக்கிட்ட நாங்க முறையாவும் சொல்லிப் பாத்தோம். அவர் காது கொடுத்துகூட கேக்கல. ஆனா.., சின்னப்பாண்டி கூட இருக்குற உடன் பிறப்பபுக்கிட்ட சின்னப்பாண்டியே! என் மகன் ராஜா செய்யறது எனக்க பிடிக்கல. ஊர்க்காரர்களுக்கு எப்படி பிடிக்கும். இதெல்லாம் அமைச்சர் கீதாஜீவனுக்கும், அக்கா கனிமொழிக்கும் தெரிஞ்சா எனக்கு தான் கெட்டபேரு என்று புழம்பி தள்ளிகிட்டு இருக்குறாரு சின்னப்பாண்டி. பாரதியார் பிறந்த மண்;, கட்டபொம்மபனைத் தூக்கிலிட்ட இடம் என்று தூத்துக்குடி மாவட்டத்தை யாராலும் மறக்க முடியாது இதெல்லாம் சரித்திரங்களே! ஆனால் இந்த சரித்திரங்களை கெடுக்கும் விதமாக எங்க பேரூராட்சி தலைவரின் கணவர் ராஜா செய்யற செயல்களை எப்படி முடிவுகளுக்கு கொண்டு வரப்போறம்னு எங்களுக்கு தெரியல என்றனர் விரக்தியாக.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து பேரூராட்சி தலைவி சுப்புலட்சமியின் கணவர் ராஜாவிடம் பேசினோம்.
புpடிக்காதவங்க ஆயிரம் குற்றச்சாட்டுகளை எங்க மீது திணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பேரூராட்சி நிர்வாகத்தை திறன்பட நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்றார். கழுவுற மீனில் நழுவுற மீனாக

ராஜா
ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சிகளில் மனைவி சேர்மன் ஆனால் கணவர்களில் ஆதிக்கம் தான் நிர்வாகத்திற்கு…..
- பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு -20பேர் கைதுதிருமங்கலத்தில் டெல்லி பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டசம்யுக்த கிசான் போர்ச்சா […]
- கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்- ஆளுனர் ஆர்.என். ரவி பேச்சுஇளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் […]
- விபத்துக்கு பிறகு கோரமண்டல் விரைவு ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டதுஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் இரண்டு நாட்களுக்கு பிறகு […]
- உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மதுரை- கப்பலூர் சுங்கச்சாவடியில் மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வுஉலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பள்ளி சிறுவர் , சிறுமிகளுக்கு விழிப்புணர்வு […]
- ஒடிசாவில் மீண்டும் ரயில் தடம் புரண்டது விபத்துநாட்டையே உலுக்கிய ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒடிசாவில் இன்று சரக்கு […]
- பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் […]
- ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டதுகடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.கேரள […]
- இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று […]
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]