குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சமீஹா பர்வீன். தடகள வீராங்கனையான இவருக்கு சென்னையில் நடைபெற்ற சாம்பியன் ஆப் தமிழ்நாடு ஐந்தாண்டு கால விளையாட்டு சாதனை விழாவில் பணி நியமன ஆணையை முதல்வர் நேற்று வழங்கினார்.

இதில் குமரியை சேர்ந்த சமீகா பர்வீனுக்கு உச்சபட்ச ஊக்கத்தொகை 17 லட்சமும் கல்வித் துறையில் வேலையும் வழங்கி முதல்வர் கௌரவப்படுத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலை ஒட்டுமொத்த குமரி மாவட்டம் மக்களும்
அவர்களது இல்ல விழா போன்று கொண்டாடி மகிழ்கின்றனர்.






