திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை ஐசியுவில் உள்ளது. உடனடியாக அந்த துறையை குணப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது” என்று, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா பி.எப்.7 அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவின் குஜராத்தில் கண்டறியப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. ஒடிசாவிலும் அதன் தாக்கம் உள்ளது.
தமிழகத்திற்கும் அச்சமான சூழல் உள்ளது. புத்தாண்டு கொண்டாட்ட காலக்கட்டங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உருமாறிய கொரோனாவை கண்டறிய தமிழகத்தில் ஆய்வக வசதி தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் இதனை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தியோடு இருக்கிறதா? என்பது மக்களிடம் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து அரசு உடனடியாக விளக்க வேண்டும். புதியவகை கொரோனாவை எதிர்கொள்ள தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதா?. தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அளவீடு ஓராண்டு தான் என சொன்னார்கள். தடுப்பூசி மற்றும் பூஸ்டர் செலுத்தி ஓராண்டு ஆகி விட்டது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்பது முதல் கேள்வி. வரக்கூடிய உருமாறிய கொரோனா பி.எப்.7-ஐ எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும்.
சீனாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், விமான நிலையங்களில் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஜூன் மாதத்தில் பாதிப்பு இருக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவே, மக்களுக்கு எதையும் மறைக்காமல் அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். இந்தியாவில் தமிழக சுகாதாரத்துறை முதல் இடத்தில் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை ஐசியுவில் உள்ளது. உடனடியாக அந்த துறையை குணப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது” என்று கூறினார்.
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […] - கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துரு பிடிக்கத்தான் செய்யும்.அது சக்கரத்தை உருளச் செய்யும் பொருட்டு […]
- குறள் 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.பொருள் (மு.வ):செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் […]
- மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன நடிகை நயன்தாராநயன்தாரா ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் ‘ஜவான்’ இந்தி படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார். […]
- கோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் வாத்தி கதைகோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் வாத்தி கதை உருவாக காரணம்’ ; மனம் […]