விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மீனாட்சி சமேத சொக்கலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்திவர்மனுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது .

அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை, நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாத சமேத அன்னபூரணி அம்மன் கோவிலிலும் ,பழைய ஏழாயிரம் பண்ணையில் உள்ள ஈஸ்வரன் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.