பக்தி செய்வதற்கு அன்பு ஒன்றே போதும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மகாசிவராத்திரி மற்றும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத் குரு ஸ்ரீ சங்கர விஜயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் சிவபுராணம் என்ற தலைப்பில் பேசினார் அப்போது அவர் பேசியதாவது
மகா சிவராத்திரி புண்ணிய காலம். இந்து சமயத்தில் மிக சிறப்பாக போற்றப்படுகிறது. அம்பிகைக்கு ஒன்பது இரவுகள். சிவபெருமானுக்கு ஒரு இரவு. கிருஷ்ண ஜெயந்திக்கும் மகா சிவராத்திரிக்கும் சரியாக 180 நாட்கள் என்று மகா பெரியவர் சொல்கிறார். அத்தகைய சிறப்புமிக்க மகா சிவராத்திரியை சிவபெருமானை அன்பு வடிவமாக நாம் பார்க்கிறோம் ..ஆணும் பெண்ணும் சரி சமமாக இந்த உலகில் வாழ்வதற்கு சிவராத்திரி வழிகாட்டுகிறது. இன்றைய நாளில் தான் பார்வதி தேவி சிவபெருமானை பூஜை செய்து அவருடைய உடலில் சரிபாதியை பெற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். ஆணும் பெண்ணும் சமம் என்பதை நமது சமயம் எத்தனையோ யுகங்களுக்கு முன்னால் காட்டி இருக்கிறது. பெண்ணுக்கு சரி சமமான வாய்ப்பை நமது சமயம் வழங்குகிறது என்பதை சிவராத்திரி நமக்கு காட்டுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் பெண்களை தாயாக பாவிக்கும் வாய்ப்பை நமது சமயம் வழங்குகிறது. இன்றைய நாளில் அன்பின் வடிவான கண்ணப்பருக்கு சிவபெருமான் காட்சி தந்தார். பக்தி செய்வதற்கு செல்வமோ கல்வியோ குலமோ அவசியம் இல்லை. அன்பு ஒன்றே போதும் என்பதை கண்ணப்பரின் வரலாறு நமக்கு காட்டுகிறது. கண்ணப்பர் பிறந்து ஆதிசங்கரரே போற்றும் அளவிற்கு பக்த மணியாக காட்சி தருகிறார்.
இதனை ஆதிசங்கரர் தனது சிவானந்த லகரியில் பதிவு செய்துள்ளார். அன்பின் வடிவமான இறைவனை அன்பினாலே பூஜிக்கும் அருமையான இரவே சிவராத்திரி ஆகும். இன்றைய நாளிலே நாம் இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு செய்வதன் மூலமாக பிரபஞ்ச ஆற்றல் முழுமையாக நமக்குள் இறங்கி வருகிறது. இத்தகைய நல்ல நாளில் நாம் இந்த சிவராத்திரி வழிபாட்டை செய்வதன் மூலம் நலம் யாவும் பெறுகிறோம்.அத்துடன் இன்றைய தினம் காஞ்சி காமகோடி பிடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ விஜயந்திர சரஸ்வதி சரஸ்வதி ஸ்வாமிகளின் ஜெயந்தி தினமாகும். இவ்வாறு இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார்.
முன்னதாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வாமிகளின் ஜெயந்தி முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி ஸ்ரீ மஹா பெரியவா கோவிலில் சிறப்பு ஹோமம் தீபாராதனை புஷ்பாஞ்சலி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இன்று மாலை எஸ் எம் கே திருமண மண்டபத்தில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் சித்த ஜாலம் என்ற தலைப்பில் பேசுகிறார்
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]