• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

புகையிலை மற்றும் குட்கா பொருள் விற்பனை..,

ByT. Balasubramaniyam

Aug 23, 2025

அரியலூர் மாவட்டம் முழுவதும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் படி காவல்துறையினர் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்று அவ்வப்போது தீடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி , ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது வரதராஜன் பேட்டையைச் சேர்ந்த அருளப்பன் (வயது 64) த/பெ சவரிமுத்து என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை மற்றும் குட்கா பொருட்களை தனது கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனை அடுத்து அருளப்பன்-ஐ காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 1.ஹான்ஸ் – 480 கிராமம் 2. பான் மசாலா – 1.05 கிகி 3. புகையிலை பொருட்கள் – 126 கிராம் முதலிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.