• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறைக்கு கோரிக்கை…

ByKalamegam Viswanathan

Mar 22, 2026

ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்றும் மேலும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கள்ளர் சீர்மரபினர் உள்ளிட்ட சமூக நீதி விடுதி காப்பாளர்களாகப் பல ஆண்டுகளாக பணியாற்றும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியகள் சிறப்பு தகுதி தேர்வு எழுத எமிஸ் (EMIS) தரவு எண் வழங்க கோருதல் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு +2 மதிப்பெண் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் பத்தாம் வகுப்பு சான்றிதழே போதுமானதாக அறிவிக்க கோருதல

ஐயா அவர்களுக்கு வணக்கம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாத உச்ச நீதி மன்றம் ஓய்வுபெற 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தொடர்ந்து பணியில் நீடிக்க கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி அடைய வேண்டும் என்ற அதிர்ச்சி தீர்ப்பு அளித்தது , இந்த தீர்ப்பால் ஒரு ஆசிரியர் கூட பாதிப்பு அடையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி அனைவரது கருத்துக்களை கேட்டறிந்தார் அப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட ஆலோசனைகள் தற்போது பணியாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வை நடத்த வேண்டும் எனவும் தேர்ச்சி பெற 40% விழுக்காடு மதிப்பெண் எடுத்தால் போதுமானதாக இருக்க வேண்டும் எனவும் முதல் தாள் இரண்டாம் தாள் இரண்டிற்கும் பணி மூப்பிற்கு ஏற்ப மதிப்பெண் வழங்க வேண்டும் செய்முறைக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் பாடவாரியான ஆசிரியர்களுக்கு அந்தந்த பாடத்தில் இருந்தே கேள்விகள் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினோம், அனைத்து கோரிக்கைகளையும் உள்வாங்கி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யமொழி அவர்கள் எந்த ஒரு ஆசிரியரையும் இந்த அரசு கை விடாது என வாக்குறுதி அளித்தார், பின்பு சமத்துவத்தை நிலைநாட்டும் விதமாகவும் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதி தேர்வை அறிவித்து சென்ற பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்ய உத்தரவிட்டும் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி கடைசி தேதி அறிவித்து மேலும் திருத்தம் ஏதாவது இருப்பின் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை திருத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, அறிவிப்பின்படி முதல் தாள் தேர்வு ஜூலை 4ஆம் தேதியும் இரண்டாம் தாள் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்று நன்றியை தெரிவித்துக் கொண்டோம்

மேலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை , கள்ளர் சிர் மரபினர் உள்ளிட்ட விடுதிகளில் பல ஆண்டுகளாக மாற்று பணியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எமிஸ் எனும் ஆசிரியர் குறியீட்டு எண் அவர்களுக்கு இல்லை இந்த குறியீட்டு எண் இருந்தால் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முடியும் இந்த நிலையில் தான் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்கள் விடுதி காப்பாளர்களுக்கு எமிஸ் குறியீட்டு எண் வழங்கி தேர்விற்கு அனுமதிக்க கேட்டு கடிதம் எழுதி உள்ளார். அதன் அடிப்படையில் ஐயா அவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு எமிஸ் குறியீட்டு எண் வழங்கி உதவிட கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இடைநிலை ஆசிரியர்கள் ஓவியம் போன்ற சிறப்பாசியர்கள் பத்தாம் வகுப்புவரை பயின்று ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள், ஓவியக் கல்லூரியில் பல ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ஐந்து ஆண்டு பட்டப்படிப்பு படிக்கால் என்ற விதியை ஏற்படுத்தி இரண்டு ஆண்டுகள் அடிப்படை கல்வியும் மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பும் சென்னை பல்கலைக்கழக்தால் பட்டம் வழங்கப்பட்டிருந்தது தற்போது +2 என அறிவித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பாக மாற்றப்பட்டும் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது இதனையும் கருத்தில் கொண்டும் இதுபோன்ற பட்டப்படிப்பிற்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் போதுமானதாக அறிவித்து இணையத்தில் பதிவேற்றும் வசதியை ஏற்படுத்தி உதவிட பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.