தமிழ் சினிமாவில் கடந்த இருபது ஆண்டுகளில் தொலைக்காட்சி, இணையதளங்கள், சமூக வலைதளங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரம்மாண்டமாக செய்திகளை வெளியிட்ட படங்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி, எந்திரன், விஜய் நடித்து வெளியான மாஸ்டர், அதனை தொடர்ந்து நேற்றையதினம் அஜீத்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில், H. வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படமாகும்.
முந்தைய மூன்று படங்களும் வசூல் அடிப்படையில் சாதனை நிகழ்த்திய படங்களாகும். 2019ல் அறிவிக்கப்பட்ட வலிமை கொரோனா தொற்று, பொது முடக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் கழித்து வெளியானது. இந்த இடைப்பட்ட காலத்தில் வலிமை படம் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தையும் பொய்யாக்கியிருக்கிறது. படம் தமிழக திரையரங்க உரிமை சுமார் 75 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை என்பது அஜீத்குமார் படங்களுக்கான வியாபார மதிப்பை காட்டிலும் 25% கூடுதலானது.
வலிமை ஏரியா உரிமை வாங்கியவர்களில் பெரும்பான்மையினர் தொடர்ச்சியாக திரைப்பட விநியோக துறையில் தொழில் செய்பவர்கள் இல்லை. பைனான்சியர்களிடம் கடன் வாங்கி படங்கள் உரிமையை வாங்கும் தரகுமுதலாளிகள் என்பதால் வலிமை படத்திற்கு கூடுதலான விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதன் காரணமாக படம் வெளியாவதற்கு முதல் நாள் ஒப்பந்த அடிப்படையில் முழுமையாக பணத்தை சேலம், வட ஆற்காடு, தென்னாற்காடு விநியோக பகுதியின் உரிமை வாங்கியவர்கள் முழுமையாக செலுத்தவில்லை.
இதனால் திரையரங்குகளுக்கு திரைப்படத்தை கொண்டு சேர்க்கும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு அனுமதி கடிதம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. அதன் காரணமாக சேலம் ARRS மல்டிபிளக்ஸ் திரையரங்கில் அதிகாலை ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில் திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் கேட் திறக்கப்பட்டு, டிக்கட் வாங்கியவர்களை உள்ளே அனுதிக்கவில்லை. டிஜிட்டல் மூலம் படம் தியேட்டருக்கு வருமா வராதா என்கிற அச்சம் காரணமாக கேட்டை திறக்கவில்லை.
ஆத்திரமடைந்த ரசிகர்கள் கேட்டை திறக்க சொல்லியும் திறக்காததால் கேட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்ததுடன் தியேட்டர் கண்ணாடி ஜன்னல்கள், விலை உயர்ந்த இருக்கைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். தாமதமாகவே படம் திரையிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திரையரங்க வட்டாரத்தில் விசாரித்தபோது, சேலம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முழுமையாக பணத்தை செலுத்தாமல் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தி பேசிய தொகையை குறைக்க சொல்லும் விநியோகஸ்தர்கள் அதிகரித்து வருகின்றனர்.
தொடர்ந்து விநியோக துறையில் இருப்பவர்களுக்கு படத்தின் ஏரியா உரிமையை வழங்காமல் விலை அதிகமாக கேட்பவர்களுக்கு படத்தின் உரிமை வழங்கப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் காரணமாக தியேட்டர்கள் சேதப்படுத்தப்பட்டு நஷ்டம் அடையவேண்டியுள்ளது என்கின்றனர். மேலும் அஜீத்குமார் ரசிகர்களிடம் இருக்கும் ஆர்வத்தை பயன்படுத்தி படம் வாங்கிய விநியோகஸ்தர்களே டிக்கட்டை கள்ளமார்க்கெட்டில் அதிக விலை வைத்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர் என்கின்றனர். பேசிய அடிப்படையில் முழுமையான தொகை செலுத்தப்படாததால் சேலம், வேலூர், கடலூர், பாண்டிச்சேரி பகுதிகளில் ஒரு நாள் முதல்வர் போன்று வலிமை படத்தை திரையிட நேற்று ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இன்று மீண்டும் ஒரு நாள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில்!
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]