• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கர்ப்பிணி பெண் இறப்பு… மருத்துவர் செவிலியர் கைது..!

ByNeethi Mani

Nov 6, 2023

ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் கரைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி. இவர் செந்துறை அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமணா வயது (23) என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் ரமணா கர்ப்பம் அடைந்து 6 மாத காலம் ஆன நிலையில். தம்பதியினர் இரண்டு குழந்தைகள்  போதும் என்று முடிவு செய்து ரமணாவின் கர்ப்பத்தை கலைக்க தா.பழூரில் உள்ள செவிலியர் சக்திதேவியை  நாடி உள்ளார். அப்போது  ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் டாக்டர் தனியாக கிளினிக் வைத்து நடத்தும் ராமச்சந்திரன் மனைவி  தேன்மொழி என்பவர் உதவியுடன் செவிலியர் சக்திதேவி மற்றும் ஆயாவாக பணியாற்றும் தேவனாஞ்சேரியை  சேர்ந்த வெற்றிச்செல்வி ஆகியோர் சேர்ந்து ரமணாவிற்கு கரு கலைப்பு மாத்திரை கொடுத்து உள்ளனர்.  அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் ரமணாவை  அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். அங்கு பெண் குழந்தையின் சிசு வயிற்றிலேயே இறந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தொடர்ந்து தொடர்ந்து ரமணாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து  மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு   பலனின்றி  உயிரிழந்தார். மேலும் திருமணம் ஆகி 7 வருடங்களை ஆன நிலையில் இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை செய்தில்  7 மாத கர்ப்பிணி பெண் இறப்பிற்கு  காரணமாக இருந்த டாக்டர் தேன்மொழி, செவிலியர், சக்தி தேவி மற்றும் உதவியாளர் வெற்றிச்செல்வி ஆகிய மூவரையும் டிஎஸ்பி ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.