தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது காக்கும் பணி எங்கள் பணி என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும்.

பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிர்களையும், உடமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச் சரிவுகள், போன்றவைகளிலிருந்து , மனிதர்களால ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்தும் மக்களை காப்பதும், இத்துறையின் முக்கிய பணியாகும். துறையின் பெயருக்கேற்றவாறு இத்துறை பணியாளர்கள் ஆபத்தில் உள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளை பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு காப்பாற்றுகின்றனர்.
தீ பாதுகாப்பு விழிப்புணர்வினை பொதுமக்களிடையே பரப்புவதற்காக வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்ற ஒரு முயற்சியை இத்துறை துவங்கியுள்ளது. பொதுமக்களை அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அழைத்து அத்தியாவசிய தீப்பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் இவ்விழிப்புணர்வு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இம்முயற்சியின் ஒரு பகுதியாக, சிவகாசி தீயணைப்பு நிலையம், ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையம், வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையம், மற்றும் மீட்புப் பணிகள் நிலைங்களில் உள்ள பணியாளர்கள் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துவார்கள். இந்த வகுப்புகள் ஒரு நாளைக்கு மூன்று என்ற விகிதத்தில் காலை 10.00 முதல் 11.00 மணிவரை, மதியம் 12.00 முதல 13.00 மணிவரை மற்றும் மாலை 16.00 முதல் 17.0/ மணிவரை நடைபெறும். இத்திட்டம் முற்றிலும் இலவசமானது.
பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது
