• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

புதிய துணை சுகாதார நிலையம் திறப்பு விழா..,

ByK Kaliraj

Mar 5, 2026

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகிலுள்ள தாயில்பட்டி பகுதியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் திறந்து வைத்தார்.

தாயில்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இதுவரை போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் சிகிச்சை பெற சிரமங்களை சந்தித்து வந்தனர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடிப்படை சுகாதார சேவைகளை பெற தொலைதூரத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், அரசின் சார்பில் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் பரிசோதனை அறை, தடுப்பூசி அறை, மருந்து வழங்கும் பகுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தினசரி சிகிச்சை சேவைகள் சீராக வழங்கப்படுவதுடன், தாய்மை மற்றும் குழந்தைகள் நல சேவைகளும் மேம்பட உள்ளன.
புதிய கட்டிடம் திறக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது கிராமப்புற சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.