விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பாரப்பட்டி அருகில் முன்னாள் சென்று கொண்டிருந்த 407 லோடு வாகனம் பின்னால் வந்த கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி பின்னால் மோதியதில் 407 லோடு வாகனம் கவிழ்ந்ததில் வண்டியில் பயணம் செய்த மாரிச்சாமி சுப்பிரமணி பலத்தகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை உள்ளனர்.

மேலும் இறந்த நபர் TNCஆலங்குளம் அருகில் உள்ள கம்மாப்பட்டியை சேர்ந்த வெள்ளை பாண்டி தேவர் மகன் துரைப்பாண்டி என்பவர் வாகனம் அமுக்கியதில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே மாரனேரி காவல்துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த துரைப்பாண்டியை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். மாரனேரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




