பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 294 பயனாளிகளுக்கு ரூ.10.29 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம் பொறுப்பாளர் இளங்கோவன், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் தளபதி செல்வம், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து, பேரூர் கழக செயலாளர் கார்த்திக் ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.வடிவேல், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

