கொடைக்கானலில் வட மாநில இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி அருகே எஸ்டேட்டில் தோட்ட வேலை செய்து வந்தவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி, அங்காரா மாவட்டத்தை சேர்ந்த மாதி ஓரான் மகன் சத்ருஓரான்(43). இவர் தோட்டத்து வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கொடைக்கானல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.