நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (18.7.2022) ஆரம்பமாக உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் அமளியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி (நாளை) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, தலைநகர் டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடியும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. முன்னதாக, அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், நாளை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், அமளியில் ஈடுபட்டு அவைகளை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர். புதிதாக கொண்டு வரப்பட்ட அக்னிபாத் திட்டம், வேலையின்மை, நாடாளுமன்றத்தில் உபயோகப்படுத்தக் கூடாத வார்த்தைகள் உள்ளிட்டவற்றை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், இந்திய அண்டார்டிகா மசோதா, 2022 உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் மசோதாக்களையும், புதிய மசோதாக்களையும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினை (திருத்தம்) மசோதா, 2019; ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் (சட்டவிரோத செயல்பாடுகளுக்கு தடை) திருத்த மசோதா, 2022 ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கான திட்டத்தை பாஜக அரசு வைத்துள்ளது.
அதேபோல், வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா, 2021, கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதா, 2019 மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதா, 2021 ஆகியவை மக்களவையில் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்றவும், புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்றவும் பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]