கே. ஜி. குழுமத்தின் அங்கமான டிஎன்சிடி நிறுவனம், கோவையில் இன்று “மேக்னம் சிட்டி” என்னும் புதிய குடியிருப்பு வளாகத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து டிஎன்சிடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திருமதி. சஞ்சனா விஜயகுமார் கூறியதாவது :- 90 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெல்த்கேர் மற்றும் கல்வி பணியில் பாரம்பரியமுள்ள கே. ஜி. குழுமத்தின் அங்கமான டிஎன்சிடி நிறுவனம், கடந்த 2010-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதுவரை 25 குடியிருப்பு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். 4000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளோம். எங்களின் அனைத்து திட்டங்களும் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. எங்களிடம் வீடு வாங்குவோர் முதல் முறை வீடு வாங்கும் வாடிக்கையாளர்களே அதிகம்.
கோவை கொடிசியா மற்றும் டைடல் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது. ப்ரீகாஸ்ட் கட்டுமான தொழில்நுட்பத்தில் கோவையில் குடியிருப்பு வீடுகளை அறிமுகப்படுத்திய முன்னோடி நிறுவனமாக டிஎன்சிடி உள்ளது.
மேலும் அறிமுக சலுகையாக – 2 பிஹெச்கே அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.56.99 லட்சம் (மார்கெட் விலை ரூ.75 லட்சம்) என அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் 3பிஹெச்கே அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.74.99 லட்சம் (மார்கெட் விலை ரூ.95 லட்சம்) என அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் வெளிநாட்டில் இருந்து கோவையில் வீடு வாங்க விரும்புவோர் எங்களின் இணையதளத்தின் மூலம் நேரடியாக கலந்துறையாடி புக்கிங் செய்யலாம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.
செப்டம்பர் 5, 6 மற்றும் 7-ம் தேதிகளில் மூன்று நாள் நடைபெறும் கலாச்சார விழா “மேக்னம் கொண்டாட்டம்” மூலம் இந்த அறிமுக விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதில் துடிப்பான நடன நிகழ்ச்சிகள், புகைப்பட அரங்குகள், குழந்தைகளுக்கான ஓவியப் பட்டறைகள், கேரிகேச்சர் எனும் கேலிச்சித்திரக் கலைகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.